பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பிற்காலச் சோழர் சரித்திரம் மேல் படையெடுத்துச் சென்று அங்ஙனஞ் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இராசராச சோழனது போர்ச் செயல்களுள் இறுதியில் நிகழ்ந்தது இவன் முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும் கைப் பற்றும் பொருட்டுப் படையெடுத்தமையேயாம். பழந்தீவு பன்னீராயிரம் என்பது சேர நாட்டிற்குத் தென்மேற்கே அராபிக்கடலிலுள்ள மால் தீவுகளைக் குறிக்கும் பழைய பெய ராகும். 'கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்' என்னும் அகத் தியச் சூத்திரத்தினாலும்! • குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும்' என்னும் தெய்வச் சிலையாரது தொல்காப்பியச் சொல்லதிகார உரைப்பகுதியினாலும் பண்டைக் காலத்தில் குமரியாற்றிற்குத் தெற்கே கடலில் பழந்தீவுகள் இருந்தமை இனிது புலனாகும். எனவே அவை சேர நாட்டிற்குத் தென் மேற்கே அண்மையில் இருந்தமையின் அத் தீவுகளிலிருந்த மக்களால் சேர நாட்டினர்க்கு அடிக்கடி இன்னல்கள் நேர்ந் திருக்கலாம். சேர நாடு இராசராச சோழன் ஆட்சிக்குட்பட் டிருந்தமையால் அந்நாட்டு மக்களின் துன்பங்களை ஒழிப்பதும் இவ்வேந்தனது கடமைகளுள் ஒன்றேயாம். அதுபற்றியே இவன் பழந்தீவுகளின்மேற் படையெடுத்து அவற்றைக் 1. ' கன்னித் தென்கரைக் கடற்பழந்தீபம் கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும் எல் லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கம் தெலுங்கம் கொங்கணந் துளுவம் குடகங் குன்றகம் என்பன குடபால் இருபுறச் சையத்துடனுறைபு கூருந் தமிழ் திரி நிலங்களும் ' (தொல், சொல், தெய்வச்சிலையார் உரை , பக். 218 and 219) 2. * பன்னிரு நிலமாவன--குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும், கொல்லமும் கூபகமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றமுகம் கிழக்குப்பட்ட கரு நடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். (ஷை உரை, பக்: 219.)