பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பிற்காலச் சோழர் சரித்திரம் பிரிக்கப்பட்டிருந்தது; சில நாடுகளைத் தன்னகத்துக்கொண்ட வள நாடு என்னும் உட்பிரிவு அக்காலத்தில் இல்லை. நாட்டை இக்காலத்துத் தாலூகாவிற்குச் சமமாகவும், வள நாட்டை ஜில்லாவிற்கு ஒப்பாகவும், மண்டலத்தை மாகாணமாகவும் கொள்ளலாம். எனவே, நம் சென்னை மாகாணம் ஜில்லாக் களின்றித் தாலூகாக்களை மாத்திரம் உடையதாயிருக்குமாயின் எவ்வாறிருக்குமோ, அவ்வாறே சோழ மண்டலமும் இராச ராசன் ஆட்சிக்கு முன் பல நாடுகளைத் தன்னகத்துக்கொண்டு விளங்கியது, இவ் வேந்தனே தன் ஆட்சி நன்கு நடைபெற வேண்டி, சில நாடுகளையும் கூற்றங்களையும் தன்பாற்கொண்ட வள நாடு என்னும் ஓர் உட்பிரிவை ஒவ்வொரு மண்டலத்தி லும் அமைத்தனன். அச்செயல் இவன் அரசியல் துட்பங்களை இயல்பாகவே யுணர்ந்தவன் என்பதைத் தெள்ளிதிற் புலப் படுத்துவதாகும். இவனது ஆணையின்படி சோழமண்டலம் ஒன்பது வள நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. பிற மண்டலங் களும் அங்ஙனமே வள நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. தொண்டை மண்டலத்தில் மாத்திரம் முன்னேயிருந்த இருபத்து நான்கு கோட்டங்களும் இருபத்து நான்கு வள நாடு களாக மாற்றப்பெற்றன. இராசராச சோழன் ஆட்சியின் 17-ஆம் ஆண்டு முதல் தான் ஊர்களையும் நகரங்களையும் குறிக்குமிடத்து அவை அமைந்த நாட்டைக் கூறுவதோடு நில்லாமல் அந்நாடு அமைந்துள்ள வள நாட்டையும் 1 ஆவணங்களிலும் கல்வெட்டுக்களிலும் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது என்பது ஈண்டு அறியத்தக்கது. இராசராசனுடைய அமைச்சர்களும் நாட்டதிகாரிகளும் அற நிலையங்களைப் பாதுகாத்துக் கண்காணிப்போரும் அறங்கூறவையத்தாரும் பிற அரசியல் அதிகாரிகளும் 1. ' சோழ மண்டலத்து க்ஷத்திரிய சிகாமணி வள நாட்டுத் திரு நறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி' என்னுங் கல்வெட்டுப் பகுதியில் மண்டலம், வள நாடு, நாடு என்பன முறைப்படி குறிக்கப்பட்டிருத்தல் காண்க.