பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பிற்காலச் சோழர் சரித்திரம் வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லத்தில் திருவை யேச்சுரம் என்னும் கோயில் ஒன்று எடுப்பித்து அதற்கு அர்ச்சனாபோகமாக நிலமளித்துள்ள திருவையன் சங்கர தேவன் என்பவன் நம் இராசராசனுக்குத் திறை செலுத்திக் கொண்டு அப்பக்கத்தில் ஆண்டுகொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன். கோனாட்டின் தலை நகராகிய கொடும்பாளூரிலிருந்த வேளான் சுந்தரசோழன் என்பான் இராசராசனுக்கு உட்பட் டிருந்த ஒரு சிற்றரசன் ஆவன். இவன் தந்தை பராந்தகன் சிறியவேளான் ஆகிய திருக்கற்றளிப்பிச்சன் நம் இராசராசன் தந்தையாகிய சுந்தரசோழன் ஆட்சியில் படைத்தலைமை பூண்டு ஈழ நாட்டிற்குச் சென்று போர்புரிந்து அங்கு உயிர் துறந்தானென்று திருவெண்காட்டிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது? . திருவல்லத்திலுள்ள ஒரு கல்வெட்டில் நன்னமரையன் என்னுங் குறு நில மன்னன் ஒருவன் குறிக்கப்பட்டுள்ளனன் 3. வைதும்பர் மரபினனாகிய இவன் கடப்பை ஜில்லாவிலுள்ள இங்கல்லூர் நாட்டை ஆட்சிபுரிந்தவன். நெல்லூர் ஜில்லா விலுள்ள ரெட்டிப்பாளையக் கல்வெட்டினால் விஷ்ணுதேவ னாகிய மும்முடி வைதும்ப மகாராசன் என்னுஞ் சிற்றரசன்

சி இருந்தனன் என்று தெரிகிறது ஒருவன் அப்பக்கத்தில் இருந்தனன இவ்விருவரும் இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட குறுநில மன்னர்கள் என்பது அன்னோரது கல்வெட்டுக்களினால் புலனாகின்றது.

வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள பஞ்சபாண்டவர் மலை யில் காணப்படும் கல்வெட்டொன்று, வீர சோழன் இலாடப் பேரரையன் என்பவன் அதனைச் சூழ்ந்த நிலப் 1. S. I. I., Vol. III, No. 51. 2. Ibid, Vol. V, No. 980. 3. Ibid, Vol. III, No. 52. 4. Nellore Inscriptions, G. 88.