பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பிற்காலச் சோழர் சரித்திரம் தந்தையாகிய மதுராந்தக உத்தம சோழன்பால் பேரன்பு பூண்டொழுகியவனாதலின், தன் மகனுக்கும் அவன் பெய ரையே வைத்தனன் என்பது ஈண்டு உணரற்பாலது. இனி, இவனை, இறைவன் நெற்றிக்கண் காணாத மற்றொரு காமவேள் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கள் புகழ்ந்து கூறுவதால், இவன் பேரழகு வாய்ந்த வனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே இவன், தன் பாட்டனாகிய சுந்தரசோழனைப்போல் எழிலுடன் திகழ்ந்த னன் எனலாம். கி. பி, 1012-ஆம் ஆண்டில் 2 இராசராசசோழன் இவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டிய நாளில் இராசேந்திரன் என்ற அபிடேகப் பெயர் வழங்கியமையால் இவன் தன் ஆட்சிக்காலம் முழுமையும் அப்பெயருடன் விளங்கினன் என்பது அறியற்பாலதொன்றாம். கி. பி. 1014-ஆம் ஆண்டில் இராசராசன் இறந்தவுடன் இவன் முடிசூட்டப்பெற்று, சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாயினான். இவன் ஆட்சியை ஏற்றுக்கொண்ட நாளில் சோழ இராச்சியம் இக்காலச் சென்னை ஆந்திர இராச்சியங்களையும், மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் தன்னகத்துக் கொண்டு ஒரு சிறந்த இராச்சியமாக இருந்தது எனலாம். அக்காலத்தில் சோழ இராச்சியத்திற்கும் வடக்கேயுள்ள மேலைச்சளுக்கிய நாடாகிய குந்தள இராச் சியத்திற்கும் இடையில் எல்லையாக அமைந்திருந்தது துங்கபத்திரை யாறேயாம். சோழ மன்னர்கள் தம் ஆட்சியைக் கைக்கொள்ளும் போது ஒருவர்பின் னொருவராக மாறிமாறிப் புனைந்து 1, S. I. I., Vol, III, No. 205, Verse 85. 2. கி. பி. 1012 மார்ச்சு 27 - க்கும் ஜூலை 7 - க்கும் இடைப் பட்ட ஒரு நாளில் இவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டப்பட் டிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருது கின்ற னர். (Ep. Ind., Vol. VIII, p. 260)