பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பிற்காலச் சோழர் சரித்திரம் பதினொன்றாம் நூற்றாண்டுகளில் சோழர்க்கும் கீழைச் சளுக்கியர்க்கும் மணவினை முதலியவற்றால் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததேயாம். எனவே, கோட்டாற்றில் அமைக்கப்பெற்றிருந்த சோழ ருடைய நிலைப்படைக்கு அச்சளுக்கிய அரச குமாரன் தலைவனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணி யப்படும். இம்முறை இராசேந்திர சோழன் நிகழ்த்திய படை யெழுச்சிகளில் புதிய நாடுகளுள் ஒன்றாதல் கைப்பற்றப் படவில்லை. ஆயினும், முன் கைப்பற்றிய நாடுகளில் தன் மகனை அரசப் பிரதிநிதியாக அமைத்து அவற்றைத் தன் ஆளுகையின்கீழ் இவன் கொண்டுவந்தமை குறிப்பிடத் தக்க நிகழ்ச்சியாகும். இனி, இராசேந்திரனது ஆட்சியின் எட்டாம் ஆண்டுக் கல்வெட்டு, இவன் முயங்கி என்னும் ஊரில் மேலைச் சளுக்கிய மன்னனாகிய சயசிங்கனைப் போரில் வென்று இரட்டபாடி ஏழரை இலக்கத்தைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றது 1. அச்செய்தி, அவ்வாண்டுக் கல்வெட்டுக் களுள் சிலவற்றில் காணப்படவில்லை. ஆகவே, அவ் வாண்டின் பிற்பகுதியில் கி. பி. 1020-ல் அப்போர் நிகழ்ந் திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இவன், காஞ்சிமா நகரிலிருந்து பெரும் படையுடன் புறப்பட்டு, இரட்டபாடி நாட்டிற்குச் சென்று அந்நாட்டரசனாகிய சயசிங்கனை வென்று காட்டிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளுமாறு செய்து, அங்குக் கிடைத்த மணித்திரளும் பொற்குவியலும் கைப்பற்றிக் கொண்டு தன் நாட்டிற்குத் திரும்பினான் என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. மேலைச் சளுக்கியருடன் இராசேந்திரன் அப்போர் நிகழ்த்தியமைக்குக் காரணம், ஐந்தாம் விக்கிரமாதித்தன் 1. Ins. 624 of 1920.