பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 157 என்ற பட்டமும் அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி 1 சடைய வர்மன் என்ற பட்டமும் இராசேந்திரனால் வழங்கப்பெற்றன என்பது ஈண்டு அறியற்பாலது. திருநெல்வேலி ஜில்லாவில் மன்னார் கோயிலில் வரை யப்பட்டுள்ள ஒரு கல்வெட்டால் சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்பவன் கி. பி. 1018-ஆம் ஆண்டில் மதுரைமா நகரில் அரசப் பிரதிநிதியாக முடி சூட்டப்பெற் றிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது 2. அவனது ஆட்சியும் கி. பி. 1042 வரையில் அங்கு நடை பெற்றது என்று தெரிகிறது. சேர மன்னனாகிய இராச சிங்கன் என்பவன் பாண்டி நாட்டிலுள்ள மன்னார் கோயி லில் ஒரு விண்ணகரம் எடுப்பித்து அதற்கு இராசேந்திர சோழ விண்ணகரம் என்று பெயரிட்டிருத்தலால் அச் சேரன் இராசேந்திர சோழனுக்குத் திறை செலுத்தும் - சிற்றரசனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி, நாகர்கோயிலுக் கண்மையிலுள்ள கோட்டாற் றில் இராசேந்திர சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு விஷ்ணுவர்த்தன மகாராசனான சளுக்கிய விசயாதித்தன் விக்கியண்ணன் என்பான்,சுந்தர சோழ பாண்டியன் ஆட்சியில் கி. பி. 1029-ல் ஒரு நுந்தா விளக்கிற்கு நிவந் தம் அளித்தனன் என்று அக்கோயிலிலுள்ள கல்வெட் டொன்று கூறுகின்றது 3. அவன், விஷ்ணுவர்த்தனன் என்னும் பெயருடையவனாயிருத்தலால் கீழைச் சளுக்கி யர் வழித்தோன்றலாயிருத்தல் கூடும். கி பி. பத்து, -- 1. பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்துவந்த பாண்டி வேந்தர்கள் எல்லாம் கடைச்சங்க காலத்திற்குப் பிறகு மாறவர் மன் சடையவர்மன் என்ற இரு பட்டங்களையும் ஒருவர் பின் ஒருவராக மாறிமாறிப் புனைந்துகொண்டு அரசாண்டனர் என்பது அன்னோர் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளா லும் அறியக்கிடக்கின்றது. அதுவே பாண்டி நாட்டு ஒழுக லாறு என்றுணர்க, 2. Ins. 112 of 1905. 3. T. A. S., Vol. VI, No. 4.