பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பிற்காலச் சோழர் சரித்திரம் பின்னர், சேரர்கள் சுயேச்சை பெற்றுத் தனியரசு புரியும் விருப்பத்துடன் தம் நாட்டிலும் கலகம் புரிவாரா யினர். அதனையறிந்த இளவரசனாகிய இராசாதிராசன் சேர நாட்டிற்கும் படையெடுத்துச் செல்வது இன்றியமையாததா யிற்று. அக்காலத்தில் சேர நாடு சில பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வோர் பகுதியும் ஒவ்வோர் அரசனால் ஆளப்பட்டு வந்தது. சேர நாட்டின் மேல் படையெடுத்துச் சென்ற இராசாதிராசன் முதலில் வேணாட்டரசனோடு போர் புரிந்து அவனைக் கொன்றனன் ; பிறகு, அவனுக்கு தவிய கூபக நாட்டு வேந்தனைப் போரில் வென்று அவன் தன் வீரங்குலைந்து புறங்காட்டியோடுமாறு செய்தனன் ; 1 பின்னர் எலிமலைக்கு அண்மையிலுள்ள இராமகுட நாட்டு மன்னன் ஒருவனோடு போர்புரிந்து வாகை சூடினான். இராமகுட நாட்டு மன்னர்கள் மூஷிக மரபைச் சேர்ந்தவர்கள் ; அரச குலத்தினர் எல்லோரையும் கொன்று அழித்த பரசிராமனால் முடி சூட்டப்பெற்ற பெருமை வாய்ந்தவர்கள். 2 கி. பி. பதி னொன்றாம் நூற்றாண்டில் இராமகுட மூவர் திருவடியாகிய கண்டன் காரிவர்மன் ஆட்சியின் 59-ஆம் ஆண்டில் வரையப்பட்ட கல்வெட்டொன்று எலிமலைப் பக்கத்தில் காணப்படுகிறது. 3 அதில் இராசேந்திர சோழ சமய சேனாபதி என்பவனைப் பற்றிய செய்தி கூறப்பட்டிருத்தலால் இராசாதிராசன் வென்ற இராமகுடநாட்டு மன்னன் கண்டன் காரிவர்மனே எனல் பொருந்தும். அப்போருக்குப் பிறகு காந்தளூர்ச் சாலையும் இராசாதிராசனால் கைப்பற்றப்பட்டது. 1. S. I. I., Vol. V, No. 633. 'வேணாட்டரசைச் சேணாட் டொதுக்கி-கூவகத்தரசைச் சேவகந் தொலைத்து' என்ற மெய்க்கீர்த்திப் பகுதிக்கு ' வேணாட்டரசனைக் கொன்று அவனுக்கு அடங்கி உட்பட்டிருந்த கூவகத்தரசனை விடுவித்து' என்று பொருள் கொள்வது (The Colas Vol. I, p. 270.) பொருந்தாது. 'வேணாட்டரசனைக் கொன்று கூவகத்தரசனது வீரங்கெடுத்து' என் பதே நேர்மையான பொருள் ஆகும். 2. Travancorc Archaeological Series, Vol. II, pp. 87-113. 3. Ins. 523 of 1930.