பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசாதிராச சோழன் 205 தன் புலி முத்திரையைப் பொறித்து அங்கு வெற்றித் தூணும் நிறுவினான். அந்நாட்களில் சோழரின் படை வீரர்கள் தங்கியிருந்த பாசறையில் அன்னோரது நிலையை யுணருமாறு ஆகவமல்லன் அனுப்பிய ஒற்றர் சிலர் அவ் வீரர்கள் பால் அகப்பட்டுக்கொண்டனர். நம் இராசாதி ராசன் அவர்களைக் கொல்லாமல் அன்னோர் மார்பில் ஆகவமல்லன் யாங்கணும் அஞ்சிப் புறங்காட்டி யோடினன் என்று தெளிவாக எழுதுவித்து, பிறகு அவர்களைத் துரத்தி விடும்படி செய்தான்.2 அவ்வவமானத்தைப் பொறுக்காத ஆகவமல்லன், பெரும் படையுடன்வந்து இராசாதிராசனோடு மீண்டும் போர் தொடங்கினான். அப்போரில் சளுக்கியப் படைத் தலைவர்களாகிய நுளம்பன், காளிதாசன், சாமுண்டன், கொம்மையன், வில்லவராசன் என்போர் தோல்வியுற்றுப் புறங்காட்டியோடினர்; கூர்ச்சர மன்னன் ஒருவன் கொல்லப் பட்டான் ; இராசாதிராசன் பெருவெற்றி எய்தினான். அவ் வேந்தன் தன் பட்டத்து யானையை நீராட்டியதாகக் கல் வெட்டுக்களில் குறிப்பிடப்பெற்ற சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகசி என்பன முறையே துங்கபத்திரை, கிருஷ்ணை, பீமா என்னும் பேராறுகளாக இருத்தல் வேண்டும் என்று கருதப்படுகின்றன. ப00 இனி, திருக்கழுக்குன்றத்திலுள்ள இராசாதிராசன் கல் வெட்டொன்றில் அப்போரில் நிகழ்ந்த வேறொரு நிகழ்ச்சி. யும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, பகை வேந்தனாகிய ஆகவ மல்லன் தன் பெற்கடை5 ஒருவனோடு வேறு இருவரையும் 1. S. I. I., Vol. IV, No. 539; Ibid, Vol. VII, No. 1046. 2. Ibid, Vol. VII, No. 1046 ; Ibid. Vol. IV, No. 539. 3. Ibid. 4. Ibid, Vol. V, No. 465. 5. அமைச்சன். (Ep. Ind., Vol, VII, p. 25.)