பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதின்மூன்றாம் அதிகாரம் இரண்டாம் இராசேந்திர சோழன் கி.பி. 1051-1063 இம்மன்னன், கங்கைகொண்ட சோழன் என்று வழங் கும் முதல் இராசேந்திர சோழனுடைய இரண்டாம் புதல்வன். இவன், தன் தமையன் இராசாதிராசன் கொப்பத்துப் போரில் கி. பி. 1054-ல் இறந்தவுடன் அப் போர்க்களத்திலே சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தி யாக முடிசூடிக்கொண்டான் என்பது இவன் கல்வெட் டால் அறியப்படுகின்றது.. ஆனால், இவன் கி. பி. 1051ஆம் ஆண்டில் முடி சூட்டப்பட்டிருத்தல் வேண்டும் என் பது மைசூர் இராச்சியத்திலுள்ள ஒரு கல்வெட்டால் வெளியாகின்றது. ஆகவே, இராசாதிராசன், கி. பி. 1051-ல் இவனுக்கு இளவரசுப்பட்டங்கட்டித் தனக்குத் துணையாய் அமர்ந்து அரசியற் கருமங்களைப் பார்க்கு மாறு ஏற்பாடு செய்திருந்தனன் என்பது தெள்ளிது. அதற்கேற்ப, இராசாதிராசன் மேலைச்சளுக்கியரோடு பல ஆண்டுகள் நடத்திவந்த பெரும் போர்களில் நம் இரா சேந்திரன் அவனுக்குப் பல்வகையானும் உதவி புரிந்து வந்தமை கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. தென்னார்க்காடு ஜில்லா மரக்காணத்தில் கி. பி. 1053-ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று,அவ்வூர் தம்பித் துணைச் சோழவள நாட்டின்கண் உள்ளது என்று உணர்த்துகின்றது. தொண்டைமண்டலத்தில் ஒரு வள நாட்டிற்குத் தம்பித் துணைச் சோழவள நாடு என்று இரா சாதிராசன் தன் ஆட்சிக்காலத்தில் பெயர் வைத்திருத் தலை நோக்குமிடத்து, அவன் தன் தம்பி இராசேந்திரன் 1. S. I. I., Vol. V, No. 647. 2. Ep. Ind., Vol. VI, pp. 213-219; Ep. Car., Vol. IV, Hg. 18. 3. Ins. 30 of 1919.