பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசாதிராச சோழன் 215 ஆட்சிகாலத்தும் சோழ இராச்சியத்தின் ஒரு பகுதி அளந்து கணக்கெடுக்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது, 5. தண்டநாயகன் சோழன் குமரன் பராந்தக மாராய னாகிய இராசாதிராச நீலகங்கரையன் :- இவன் இராசாதி ராசன் ஆட்சிக்காலத்திலிருந்த படைத் தலைவருள் ஒருவன் ; அரசனால் அளிக்கப்பெற்ற இராசாதிராச நீலகங்கரையன் என்னும் பட்டம்பெற்றவன், இவனைப்பற்றிய கல்வெட் டொன்று திருவொற்றியூர்க் கோயிலில் உளது.! எனவே, இவன் தொண்டைமண்டலத்தின் வடபகுதியிலிருந்த ஒரு தலைவன் ஆதல் வேண்டும். 6. தண்ட நாயகன் வெண்காடன் சங்கரனாகிய இரா சாதிராசப் பல்லவராயன் :- இவன் உத்தமசோழ நல்லூரினன்; இராசாதிராசனுடைய படைத்தலைவருள் ஒருவன் : அரசாங்க அலுவலாளருள் பெருந்தரம் என்ற உயர் நிலையில் அமர்ந் திருந்தவன் ; அரசனால் வழங்கப்பெற்ற இராசாதிராசப் பல்லவராயன் என்னும் பட்டம் பெற்றவன்; இவன் அந்தணர் களையும் சிவயோகிகளையும் நாள்தோறும் உண்பித்தற்குத் திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கேயுள்ள திருப்பைஞ்சீலிக் கோயிலைச்சார்ந்த செந்தாமரைக் கண்ணன் மடத்திற்கு நிலம் அளித்துள்ளனன் என்பது அவ்வூரிலுள்ள ஒரு கல் வெட்டால்2 அறியப்படுகின்றது. எனவே, இவன் சோழ மண்டலத்தின் மேற் பகுதியில் கொங்கு நாட் டெல்லைப்புறத் தில் தங்கியிருந்த ஒரு தண்டநாயகன் என்பது இனிது விளங்குதல் காண்க. 1. Ins. 102 of 1912. 2. S. I, I., Vol. IV, No. 537.