பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் இராசேந்திர சோழன் 219 ' பற்றலரை வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றற் கொண்டோனும்' என்றும் கொலையானைப் பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் '2. என்றும் கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தரால் தம் உலாக்களில் குறிப்பிடப்பட்டிருத்தல் உணரற்பாலது. இனி, இவன் ஆட்சிக் காலத்தில் அடுத்து நிகழ்ந்தது ஈழநாட்டுப் போராகும். அது கி. பி. 1054-ன் இறுதியி லாதல் 1055-ம் ஆண்டின் தொடக்கத்திலாதல் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது.3 ஈழ நாட்டின் பெரும்பகுதி சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது முன்னர் விளக்கப் பட்டிருக்கின்றது. அதன் தென்கீழ்ப் பகுதியாகிய ரோகண நாட்டில் பழைய சிங்கள மன்னரின் வழியினர் தங்கியிருந்து கொண்டு, ஈழம் முழுவதையும் தம் ஆட் சிக்கு உட்படுத்துவதற்குக் காலம் கருதிக்கொண்டிருந்த னர். எனவே, சில சமயங்களில் அன்னோர் அந்நாட்டில் அமைதியின்மையையும் கலகத்தையும் - உண்டுபண்ணியிருத் தல் கூடும். அத்தகைய சமயம் ஒன்றில்தான் நம் இரா சேந்திரன் பெரும்படையொன்றைத் தக்க தலைவன் ஒருவன்கீழ் ஈழ நாட்டிற்கு அனுப்பிப் போர் நிகழ்த்தி யிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. அங்கு நடை பெற்ற போரில் வீரசலாமேகன் என்பவன் கொல்லப்பட் டான் ; இலங்கையர்க் கிறைவனாகிய மானாபரணன் புதல்வர் இருவர் போர்க்களத்தில் சிறை பிடிக்கப்பட்டனர், 1. விக்கிரமசோழன் உலா, வரிகள் 38-40. 2. இராசராசசோழன் உலா, வரிகள் 46-48. 3. S. I, I., Vol. V, Nos. 489 and 512.