பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 இரண்டாம் இராசேந்திர சோழன் புதல்வர்கள் அறுவர் இருந்தனர். அவர்கள், இராசேந்திர சோழன், முகையவிழலங்கல் முடிகொண்ட சோழன், சோழ கேரளன், கடாரங்கொண்ட சோழன், படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழன், இரட்டபாடி கொண்ட சோழன் என்போர்.! அவ்வறுவர்க்கும் இவன் உத்தமசோழன் முதலான பட்டங்கள் வழங்கியுள்ளனன். இவனுக்கு மதுராந்தகசோழன், நிருபேந்திர சோழன் என்னும் இரு பேரன்மாரும் இருந்தனர். இவனுடைய மகள் மதுராந்தகி என்பாள். அவள் கீழைச்சளுக்கிய மன்னனாகிய இராசராச நரேந்திரன் மகனும் கங்கைகொண்ட சோழன் மகள் வயிற்றுப் பேரனுமாகிய இராசேந்திரனுக்கு மணஞ்செய்து கொடுக்கப்பெற்றாள். அவ்விராசேந்திரனே, பிறகு சோழ இராச்சியத்தில் அரசாண்ட முதற் குலோத்துங்க சோழன் என்பது உணரற்பாலது-4 இனி, இவ்விரண்டாம் இராசேந்திரன், நாடகம் முத லான கலைகளிற் பெரும் பற்றுடையவன் என்பதும், தன் முன்னோர்களிடத்தில் அன்பும் மரியாதையும் உடையவன் என்பதும் தஞ்சை இராசராசேச்சுரமுடையார் கோயிலில் இராசராசேச்சுர நாடகம் நடித்தற்கு ஆண்டு ஒன்றிற்கு 120 கலநெல் நிவந்தமாக இவன் அளித்துள்ளமையால் நன்கறியக்கிடக்கின்றன . 1. S. I. I.,Vol. V, No. 644. 2. இவன் தன் உடன் பிறந்தார்க்கும் மக்கட்கும் வழங்கியுள்ள பட்டங்கள் பல. அவற்றுள், சோழபாண்டியன், சோழகேர ளன், சோழகங்கன் என்னும் பட்டம் பெற்றவர்கள் பாண்டிய கேரள கங்க நாடுகளுக்கு அரசப்பிரதி நிதிகளாக இருந்து அவற்றை ஆட்சிபுரிந்தோர் ஆவர். சோழ அயோத்திய ராசன், சோழ கன்னக்குச்சியன் முதலான பட்டம் பெற்ற வர்கள் அவற்றைக் கௌரவப் பட்டங்களாகப் பெற்றவ ராதல் வேண்டும். 3. S. I. I., Vol. V, No. 489. 4. Ep. Ind., Vol. V, Chellur Plates, Verses 11 and 12. 5. S. I. I., Vol II, No. 67. 15