பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பிற்காலச் சோழர் சரித்திரம் ராசேந்திரனை மேலைச்சளுக்கிய தண்டநாயகர்களாகிய சன நாதன், இராசமய்யன், திப்பரசன் என்போர் படை யுடன் வந்து கிருஷ்ணையின் கரையில் தடுத்தனர். இருதரத் தினர்க்கும் இக்காலத்தில் பெசவாடா! என்று வழங்கும் விசயவாடை நகர்க்கண்மையில் பெரும்போர் நடைபெற்றது, அதில் சளுக்கிய தண்டநாயகர்கள் தோல்வியுற்றுத் தம் உயிர் பிழைத்தோடிக் கானகத்தின்கண் ஒளிந்தனர். பிறகு இவன் கோதாவரியாற்றைத் தாண்டி, கலிங்கம் ஏழுங்கடந்து சக்கரக்கோட்டத்திற்கு அப்பாலும் படையுடன் சென்று வேங்கி நாட்டைத் திரும்பக் கைப்பற்றினான் ; இறு தியில், தன்பால் அடைக்கலம் புகுந்த கீழைச்சளுக்கிய மன்னனாகிய ஏழாம் விசயாதித்தனிடம் அந்நாட்டை அளித்து விட்டு, வெற்றி வேந்தனாய்த் தன் தலை நகர்க்குத் திரும் பினான். இவன் இரண்டாம் முறையிலும் வேங்கியில் நிகழ்த்திய போரில் வெற்றி எய்தியமையால் மேலைச்சளுக்கியர் எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. எனவே, இவன் வேங்கி நாடு பற்றித் தன் தமையன்மாரினும் மிகுந்த கவலை கொண் டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இனி, வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் குறிக்கப் பெற்றுள்ள போர் நிகழ்ச்சிகளுள், இவன் ஈழ நாட்டு மன்னன் விசயபாகுவுடன் புரிந்தபோரும் ஒன்றாகும் ; அஃது இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்களுள் ஒன்றில் மாத்திரம் காணப்படுகிறது. எனவே, அது கி, பி. 1067-ஆம் ஆண்டில் நடைபெற்றதாதல் வேண்டும். ஈழமண்டலத்தின் தென்கீழ்ப்பகுதியாகிய ரோகண நாட்டைத் தவிர மற்றப்பகுதிகள் எல்லாம் சோழர் ஆட்சிக்கு உட் பட்டிருந்தன என்பது முன்னர்க் கூறப்பட்டுளது. அந்த ரோகண நாட்டிலிருந்த விசயபாகு என்னும் வேந்தன் ST 1. Bezwada. 2. Ep. Ind., Vol, XXI, No, 38.