பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பிற்காலச் சோழர் சரித்திரம் ஊரைக் கி. பி. 1069-ஆம் ஆண்டில் உத்தராயண சங்கராந்தி நாளில் மூன்று பிராமணர்கட்குப் பிரமதேய மாக அளித்தனன் என்பது அவ்வூரிலிருந்து கிடைத்த செப்பேடுகளால் அறியப்படுகிறது.. அவ்வூர் இக்காலத் தில் சித்தூர் ஜில்லா புங்கனூர்த் - தாலூகாவில் சாரால என்னும் பெயருடன் உள்ளது இனி, இவன் தந்தையின் காலத்தில் சோழ இராச்சி யத்திற்குத் தலை நகராயிருந்த கங்கைகொண்ட சோழ புரமே இவன் ஆட்சிக் காலத்தும் தலை நகராயிருந்தது என் பது, இவன் மேலைச் சளுக்கியரைப் போரில் வென்று ' ஜயத்திருவொடும் கங்காபுரி புகுந்தருளினான் என்று கல்வெட்டுக்கள் கூறுவதால் நன்கறியப்படுகின்றது 2 அப்பெருநகரில் சோழகேரளன் மாளிகை என்னும் அரண்மனையில் இராசேந்திரசோழ மாவலி வாணராயன் என்ற அரியணையில் இவன் வீற்றிருந்து அறங்கள் புரிந் துள்ளமை கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.3 இவ்வேந்தனுக்கு அந்நாளில் பல பட்டங்கள் வழங்கி வந்தன என்பது இவன் கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் அறியக்கிடக்கின்றது. அவை, சகல புவனா சிரயன், ஸ்ரீமேதினி வல்லவன், மகாராசாதிராசன், பர மேசுவரன், பரமபட்டாரகன், இரவிகுலதிலகன், சோழ குலசேகரன், பாண்டிய குலாந்தகன், ஆகவமல்ல குல காலன், ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்ட ராசசேகரன், இராசாசிரயன், இராசராசேந்திரன், வீரசோழன், கரி கால சோழன், வீரன், இரட்டராசகுல காலன் என்பன வாம் . அவற்றுள் முதல் ஐந்து பட்டங்கள் மேலைச் 1. Ep. Ind., Vol. XXV, No, 25. இச்செப்பேடுகளில் முதலிலுள்ள 81 சுலோகங்கள் கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் இருத்தல் அறியத்தக்கது. 2. Ep. Ind., Vol. XXI, No. 38, Line 7. 3. Ibid, Line 11. 4. Ep, Ind., Vol. XXV, pp. 262 and 263,