பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் 247 சளுக்கிய மன்னர்கள் புனைந்து கொண்ட பட்டங்களாக இருத்தல் அறியத்தக்கது. அவர்களைப் பன்முறை வென்ற காரணம் பற்றி அவர்கள் பட்டங்களையும் இவ் வேந்தன் புனைந்து கொண்டனன் போலும்; மற்றுஞ்சில பட்டங்கள், மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆகவமல் லனையும் பாண்டியனையும் போரில் வென்று வாகை சூடி யமைபற்றி இவன் புனைந்து கொண்டனவாகும் ; வேறு சில பட்டங்கள், இவன் தான் தோன்றிய குலத்தைச் சிறப்பித்தமை பற்றி எய்தியனவாகும். கரிகால சோழன் என்பது இவன் தமையன் இரண்டாம் இராசேந்திரன் இவனுக்கு வழங்கிய பட்டம் என்று அவன் கல்வெட்டுக் களால் தெரிகிறது.! வீரராசேந்திர சோழன் என்னும் இயற்பெயர் வீரசோழன் என்றும் வழங்கப்பெறுவது இயல்பேயாம். இனி, வீரராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் பாண்டி - மண்டலத்தில் மிழலைச் கூற்றத்திலுள்ள பொன்பற்றி என்னும் நகரில் சிற்றரசனாயிருந்த புத்தமித்திரன் என் பான் இவன் விரும்பியவாறு ஐந்திலக்கணங்களும் அடங் கிய நூல் ஒன்றெழுதி அதற்கு வீரசோழியம் என்று பெயரிட்டுள்ளான். அந்நூலில் ' எல்லாவுலகும் - மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்றன் - நாவியல் செந்தமிழ்ச் சொல்2 எனவும், ' தேமேவிய தொங்கற் றேர்வீரசோழன் றிருப்பெயரால் - பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்று கொண்டே'3 என வும் இம்மன்னன் பாராட்டப்பெற்றிருப்பது அறியற் பாலது. எனவே, இவன் தமிழ்மொழி வளர்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனன் என்பது தேற்றம். இவ்வரசர் பெருமான் பட்டத்தரசி உலக முழுதுடை யாள் என்னுஞ் சிறப்புப் பெயருடன் இவன் கல்வெட்டுக் 1. S. I. I., Vol. V. Nos. 644 and 647. 2. வீரசோழியம், சந்திப்படலம், 7. 3. வீரசோழியப்பாயிரம் பா. 3.