பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிராசேந்திர சோழன் 253 முடி சூடிய சில - திங்கள்களில் இவ்வதிராசேந்திர சோழன் ஊழ்வினை வயத்தால் இறக்க நேர்ந்தது என்பது அவ்வாண்டிலேயே சூன் திங்களில் முதற் குலோத்துங்க சோழன் முடிசூட்டப் பெற்றிருத்தலால் நன்கு புலனாகின் றது. எத்துணை ஆற்றலும் வீரமும்படைத்த பெருவேந் தனாயிருப்பினும் அவன், தன் வினையொழிந்தால் முடி வெய்துவது ஒரு தலை. இந்நிலையில், அதிராசேந்திர சோழன் ஆட்சியை ஏற்றுக்கொண்ட சில திங்கள்களில் இறந்தமைக்குச் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றையும் ஈண்டாராய்ந்து உண்மை காணுதல் ஏற்புடைய தேயாம்: மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆறாம் விக்கிரமாதித் தன் வரலாறு எழுதிய வடமொழிப் புலவர் பில்ஹணர் என்பார், சோணாட்டில் நிகழ்ந்த உண்ணாட்டுக் கலகத்தில் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான் என்று அந்நூலில் கூறியுள்ளனர். அன்றியும், அதிராசேந்திரனுக்கு முடி சூட்டு விழா நிகழ்த்த முயன்றபோது சோழநாட்டில் பகைஞர்கள் புரிந்த இடையூறுகள் எல்லாவற்றையும் சளுக்கிய விக்கிரமாதித்தனே தன் ஆற்றலால் நீக்கி, இவனுக்குக் கங்கைகொண்ட சோழபுரத்தில் முடி சூட்டி விட்டுத் தன் நாட்டிற்குச் சென்றனன் என்றும் அவ்வாசி ரியர் அந்நூலில் குறிப்பிட்டுள்ளனர். சளுக்கிய விக்கிர மாதித்தனுக்கு வீரராசேந்திரன் புதல்வனாகிய அதிரா பூவலய முற்றும் புரந்ததற்பின்-மேவலர்தஞ் சேலைத்துரந்து சிலையைத் தடிந்திருகாற் சாலைக் கலமறுத்த தண்டினான்-மேலைக் கடல் கொண்டு கொங்கணமுங் கன்னடமுங் கைக்கொண் டடல்கொண்ட மாராட்டரசை-யடலை யிறக்கிவடவரையே யெல்லையாத் தொல்லை மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி-யறத்திகிரி வாரிப்புவனம் வலமாகத் தந்தளிக்கும் ஆரிற் பொலிதோள் அபயன் '-விக்கிரமசோழன் உலா,