பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிற்காலச் சோழர் சரித்திரம்

அரசர்கள் தாழ்ந்த நிலையை எய்திச் சோழ நாட்டில் ஒரு சிறு பகுதியைத் தமக்குரியதாகக்கொண்டு குறுநில மன்ன ராய்ப் பிறவேந்தர்க்கு அடங்கி வாழ்ந்து வந்தனராதல் வேண்டும். அக்காலத்தில் வெளிவந்துள்ள செப்பேடு களும், கல்வெட்டுக்களும், தமிழ் நூல்களும் இவர்கள் சோழ நாட்டில் இருந்தனரென்ற அளவில் உணர்த்து கின்றனவேயன்றி இவர்களது பிற செய்திகளைக் கூற வில்லை. இதற்குக் காரணம், இவர்கள் தம் பெருமை யிழந்து தாழ்ந்த நிலையிலிருந்தமையேயாம்.

இனி, அக்காலப் பகுதியில் நிகழ்ந்தவற்றை ஆராய்ந்து இவர்கள் நிலையை இயன்றவரையில் உணர்ந்துகொள் வதும் இன்றியமையாததாகும். கி. பி. நான்கு ஐந்தாம் நூற்றாண்டுகளில் நம் தமிழகம் களப்பிரர் என்ற ஒரு வகையாரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது பல ஆதாரங்களால் அறியக்கிடக்கின்றது. பாண்டி நாடு களப்பிரரால் கைப்பற்றப்பட்டிருந்த செய்தி வேள்விக் குடிச் செப்பேடுகளாலும் புலனாகின்றது . அந்நாட்களில் தான் சோழரும் தம் நாட்டைக் களப்பிரரிடம் இழந்திருத் தல் வேண்டும் என்பது ஒருதலை. முதலில், பாண்டியர் தாம் இழந்த நாட்டை மீண்டும் கைப்பற்றித் தமிழகத்தின் தென்பகுதியில் தம் பேரரசை நிறுவி அதனை உயர் நிலைக்குக் கொணர்ந்து ஆட்சிபுரிந்து வருவாராயினர். சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிய பல்லவர், தமிழகத்தின் கீழ்ப்பகுதிக்குப் பேரரசராய் விளங்கு வாராயினர்' . இந்நிலையில் சோழர் தம் நாட்டைக் கைப் பற்றித் தமக்குரியதாகக்கொண்டு ஆட்சி நடத்துவதற்குத் தக்க காலமும் துணைவலியும் அமையாமையால் காலங் கருதி அடங்கி வாழ்ந்துவந்தனர். எனவே, அந்நாட்களில்


1. The Colas Vol. I. pp 119-121; பாண்டியர் வரலாறு பக் 21, 22. 2. Epigraphia Indica, Vol. XVII, No. 16. 3. Kasakudi Plates of Nandivarma Pallavamalla-South Indian Inscriptions, Vol. II, No. 73.