பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரண்டாவது அதிகாரம்

கடைச் சங்கத்திறுதிக்காலத்திற்கும் பிற்காலச் சோழர் ஆட்சியின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட சோழர் நிலை

துரைமா நகரில் நிலவிய கடைச்சங்கம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் முடிவெய்தியது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து நிறுவியுள்ள உண்மையாகும். எனவே, புறநானூறு, அகநானூறு, பத்துப்பாட்டு முதலான கடைச்சங்க நூல் களில் சொல்லப்பட்டுள்ள சோழமன்னர்கள் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் சோழ மண்டலத்தில் ஆட்சி புரிந்த முடியுடைவேந்தர் ஆவர். அவர்கள் காந்தமன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான், போரவைக்கோப் பெருநற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெரு விறற்கிள்ளி, நெடுங்கிள்ளி, இராசசூயம்வேட்ட பெருநற் கிள்ளி, செங்கணான், நல்லடி2 என் போர். அன்னோர் வரலாறுகளும் மிகச் சுருக்கமாகவே சங்க நூல்களில் காணப் படுகின்றன. கடைச்சங்கத் திறுதிக் காலத்திற்குப் பிறகு கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் தஞ்சை மாநகரைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கிய சோழன் விசயாலயன் காலம் வரையில் சோழரின் செய்திகள் நன்கு புலப்படவில்லை. இவ் விடைக்காலப் பகுதியில் சோழ


'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முந்திய தமிழர் ' என்ற ஆங்கில நூலால் இதனையறியலாம். செந்தமிழ்த் தொகுதி 15. பக், 3-24; தொகுதி 17. பக். 185-208. இவன் செங்கணான்மகன் என்பது அன்பிற் செப்பேடு களால் அறியப்படுகிறது. (Epi. Ind , Vol, 15. No. 5) அகநானூற்றிலுள்ள 356-ம் பாடலில் இவன் கூறப் பட்டிருத்தல் காண்க.