பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர்க்கை || சோழ மன்னர்களைப் பற்றிய பழைய பாடல்கள் முதல் ஆதித்த சோழன் புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன் நலமன்னிய புகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே. (1) சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப் பறைபோக் கெங்கட் கிறைவன் இருக்குவேளூர்மன் இடங்கழியே. (2) செம்பொன் அணிந்து சிற்றம்பலத் தைச்சிவ லோக மெய்தி நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர் நல்ல வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான் நீம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணான் எனும் நித்தனையே. (3) 1. இப்பாடல்கள் மூன்றும் நம்பியாண்டார் நம்பி இயற்றி யுள்ள திருத்தொண்டர் திருவந்தாதியில் உள்ளவை. (பாக்கள், 50, 65, 82.) இந்நூல், சைவத்திருமுறைகளுள் ஒன்றாகிய பதி னோராந் திருமுறையில் அடங்கிய நாற்பது நூல்களுள் ஒன்றாகும். இதன் ஆசிரியராகிய நம்பியாண்டார் நம்பி என்பார், தம் காலத்துச் சோழமன்னனாகிய முதல் ஆதித்தனை இந்நூலில் மேலே குறித்துள்ள மூன்று பாடல்களிலும் புகழ்ந்து பாராட்டியிருத்தல் அறியத்தக்கது. இப்புலவர்பெருமான் முதல் இராசராசசோழன் காலத்தில் இருந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அக்கொள்கை பொருந்தாது என்பதும் இவர் முதல் ஆதித்த சோழன் காலத்தில்தான் இருந்தவராதல் வேண்டும் என்பதும் 'நம்பியாண்டார் நம்பி காலம்' என்ற என் கட்டுரையில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. (செந்தமிழ்த் தொகுதி 45, பக்கங்கள் 7-15).