பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டராதித்த சோழர் மின்னாருருவ மேல்விளங்க வெண்கொடிமா ளிகைசூழப் 'பொன்னார்குன்ற மொன் றுவந்து நின்றது போலுமென்னாத் தென்னாவென்று வண்டுபாடுந் தென்றில்லை யம்பலத்துள் என்னாரமுதை யெங்கள் கோவை யென்றுகொ லெய்து வதே. (1) ஓவாதமுத்தீ யஞ்சுகேள்வி யாறங்க நான்மறையோ ராவே படுப்பா ரந்தணாள ராகுதி வேட்டுயர்வார் மூவாயிரவர் தங்களோடு முன்னரங் கேறிநின்ற கோவேயுன் றன் கூத்துக்காணக் கூடுவ தென்றுகொலோ. முத்தீயாளர் நான்மறையர் மூவா யிரவர் நின்னோடு ஒத்தேவாழுந் தன்மையாள ரோதிய நான்மறையைத் தெத்தேயென்று வண்டுபாடுந் தென் றில்லை யம்பலத்துள் அத்தாவுன்றனாடல்காண வணைவது மென்றுகொலோ. மானைப்புரையு மடமென்னோக்கி மாமலை யாளோடும் - ஆனைஞ்சாடுஞ் சென்னிமேலோ ரம்புலி சூடுமரன் தேனைப்பாலைத் தில்லைமல்கு செம்பொனி னம்பலத்துக் கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கூடுவ தென்றுகொலோ. (4) களிவானுலகிற் கங்கைநங்கை காதலனே யருளென் றொளிமால்முன்னே வரங்கிடக்க வுன்னடியார்க் கருளுந் தெளிவாரமுதே தில்லைமல்கு செம்பொனி னம்பலத்துள் ஒளிவான்சுடரே யுன்னை நாயே னுறுவது மென்றுகொலோ. (5) 1. பத்துப் பாடல்களைத் தன்னகத்துக்கொண்ட இப்பதிகம், கண்டராதித்த சோழர் என்று வழங்கப்பெறும் இவ்வரசர் பெரு மானே தில்லையம்பலவாணர்மீது பாடியதாகும். இது சைவத் திரு முறைகளுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் உள்ளது. அதில் இறுதியிலுள்ள திருப்பல்லாண்டு தவிர ஏனைய பதிகங்கள் எல்லா வற்றையும் திருவிசைப்பா என்று கூறுவது வழக்கம். செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த இவ்வேந்தர் பெருந்தகை தாம் வழிபடச்சென்ற சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள இறைவன் மீது வேறுபல பதி கங்களும் பாடியிருத்தல் கூடும். அவை இக்காலத்தில் கிடைத்தில. இவர் இப்பதிகத்தின் இறுதிப்பாடலில் தம் பெயரைக் குறித்திருப்ப தோடு எட்டாம் பாடலில் தம் தந்தை முதற் பராந்தக சோழன் தில்லையம்பலத்தைப் பொன்வேய்ந்து சிறப்பித்தமையைப் பாராட்டி யிருத்தலுங் காண்க.