பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பிற்காலச் சோழர் சரித்திரம்

மன்னன் ஒருவன் சோழ நாட்டில் இருந்தனன் என்பது பெறப்படுதல் காண்க.

கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் சுந்தர மூர்த்திகள் சேரமான் பெருமாளுடன் மதுரைமா நகர்க்குச் சென்றபோது, அவர்களைப் பாண்டி வேந்தன் ஒருவனும் அந்நகரில் முன்னரேபோய்த் தங்கியிருந்த அவன் மருமகன் சோழமன்னன் ஒருவனும் எதிர்கொண்டழைக்க, எல்லோரும் சோமசுந்தரக் கடவுள் திருக்கோயிலுக்குச் சென்றார்கள் என்று பெரியபுராணம் 1 கூறுகின்றது. அன் றியும், சுந்தரமூர்த்திகள் மதுரையம்பதிக்கு அண்மையி லுள்ள திருப்பரங்குன்றத்திற்குச் சென்று, அங்குத் தாம் பாடிய பதிகத்தின் இறுதிப் பாடலில் அதனைச் சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர் முன்னே பாடியதாகக் கூறியுள்ளனர் 2. அடிகள் குறிப்பிட்டுள்ள சேரர், சேரமான் பெருமாள் நாயனார் என்பதும், சோழன், பாண்டியன் மகளை மணந்து மதுரையில் அப்போது தங்கியிருந்த ஒரு சோழ அரசகுமாரன் என்பதும், பாண்டியன், கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்து கொண் டிருந்த பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் என்பதும் ஆராய்ச்சியால் புலப்படுகின்றன.

திருவேங்கடத்தைச் சார்ந்த திருச்சானூர்த் திரு இளங்


1. | சேரமான் தோழருமச் சேரர்பிரா னும்பணிப்பூண் ஆரமார்பரைமதுரை ஆலவாயினில் வணங்க வாரமா வந்தணைய வழுதியார் மனக்காதல் கூரமா நகர் கோடித் தெதிர் கொண்டு கொடுபுக்கார். [ கழறிற் -புரா. 91] தென்னவர்கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார் அன்னவர்கள் உடன்கூட அணையவவருங்கூடி மன்னுதிரு ஆலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார் [ஷை 92.) 2. சுந்தரமூர்த்திகள் திருப்பரங்குன்றப் பதிகம்--பா 11.