பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨
மூன்றாம் பதிப்பின் முகவுரை

இச் சரித்திர நூல் மூன்றாம் பதிப்பாக இப்போது வெளியிடப் பெறுகின்றது. இதுகாறும் நிகழ்த்திய ஆராய்ச்சி யினால் அறியப்பெற்ற வரலாற்றுச் செய்திகள் எல்லாம் இப் பதிப்பில் இடம் பெற்றுள்ளன. முதல் இராசராச சோழனையும் அவனுடைய தாய் தந்தையரையும் பற்றிய சிறப்புடைச் செய்திகளைத் தெரிவிக்கும் திருக்கோவலூர்க் கல்வெட்டுப் பகுதி அவ்வூரிலன்றி வேறு எங்கும் காணப்படாமையாலும் ஆராய்ச்சியாளர்க்குப் பெரிதும் பயன்படத்தக்கதாயிருத்தலா லும் இப் பதிப்பின் பிற்சேர்க்கையில் சேர்க்கப்பெற்றுள்ளது.

இந் நூலை மூன்றாம் பதிப்பாகத் திருந்திய முறையில் வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார்க்கு எனது நன்றியுரியதாகும். இதனை வனப்புற அச்சிட்டுதவிய திருச்சிராப்பள்ளி கீதா பிரஸ் உரிமையாளரது பணி பாராட்டத்தக்கது.

இங்ஙனம்,

அண்ணாமலை நகர், T. V. சதாசிவ பண்டாரத்தார்.

4-8-58.