பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் 53 வீரர்கள் உயிர் துறந்தனர். போர் மிகக் கடுமையாக நடைபெற்றதாயினும், சோழ நாட்டுப் படைவீரர்கள் சிறிதும் அஞ்சாமற் போர் புரிந்து தம் வீரத்தையும் ஆற் றலையுங் காட்டினர். வெற்றித் திரு எவர்க்குரித்தாகுமோ என்ற ஐயப்பாடும் ஏற்பட்டது. அந்நிலையில், கங்கமன்ன னாகிய இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பொன்று, யானை மேலிருந்து போர் புரிந்துகொண்டிருந்த அரசகுமாரனாகிய இராசாதித்தன் மார்பில் தைக்கவே, அவனும் விண்ணுல கடைந்தான். அந்நிகழ்ச்சியினால் சோணாட்டுப் படை வீரர்கள் மனமுடைந்துபோகவே, இராஷ்டிரகூடப் படை கள் ஊக்கத்தோடு போர் புரிந்து வெற்றி எய்தின ; மூன் றாங் கிருஷ்ணதேவனும் வாகை சூடினான். இப்போர் நிகழ்ச்சி, ஆனை மங்கலச் செப்பேடுகளிலும் திருவாலங் காட்டுச் செப்பேடுகளிலும் சொல்லப்பட்டிருக்கின்றது 2. பங்களூர்ப் பொருட்காட்சிச் சாலையிலுள்ள ஆதகூர்க் கல்வெட்டொன்று , பூதுகன், இராசாதித்தன் யானைமேல் வீற்றிருந்த அம்பாரியையே தன் போர்க்களமாகக் கொண்டு போர்புரிந்து அவனைக் குத்திக்கொன்றான் என்றும் மூன்றாங் கிருஷ்ணதேவன் அவனது வீரச் செயலைப் பாராட்டி அவ னுக்கு வனவாசிப் பன்னீராயிரமும் பிறவும் வழங்கினான் என்றும் கூறுகின்றது. கும்பகோணம், திருவிடைமருதூர், திருவெள்ளறை முதலான ஊர்களில் காணப்படும் கல் வெட்டுக்கள் 4, இராசாதித்தனை ' ஆனைமேற்றுஞ்சினார் ' 1. Ep. Ind., Vol. XXII, No. 34. 2. S. I. I., Vol. III, No. 205, Verse 54. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இச்செய்தியைக் குறிப் பிடுங்கால் இராசாதித்தன் மூன்றாங் கிருஷ்ணதேவனைப் போரில் வென்று பின்னர் வானுலகடைந்தான் என்று கூறுகின்றன, 3. Ep. Ind., Vol. VI, pp. 50 to 57, வனவாசிப் பன்னீராயிரத்தோடு வெள் வோல் 300-ம் (Belvol 300, கின்சுகட் 70-ம் (Kinsukad 70) வாகெனாட் 70-ம் (Bagenad 70) புரிஜெரி 300-ம் (Purigere 300) பூதுகனுக்குக் கொடுக்கப் கப்பட்ட னவாம். (Ibid, p. 57) 4. S. I, I., Vol. III, Nos. 132 and 201. Ibid, Vol. V, No, 720.