பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பிற்காலச் சோழர் சரித்திரம் கணவனைப் பிரிந்தும் உயிருடன் இருந்தனள். அவ் வரசி, சிவபெருமானுக்குப் பல்வகைத் தொண்டுகள் புரி வதிலேயே தன் வாழ் நாட்களைக் கழித்துவந்தனள் என்பது பல ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு புலனாகின்றது. இக்காலத்தில் கோனேரிராசபுரம் என்று வழங்கும் திருநல்லம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளி யுள்ள சிவபெருமானுக்கு அவ்வம்மை தன் கணவன் பெயரால் ' கண்டராதித்தம்' என்னுங் கற்றளி அமைத்து அதில் தன் கணவன் அவ்விறைவனை வழிபடுவதுபோல் ஒரு படிமம் வைத்திருப்பதும் அறியற்பாலதாகும்.! 1. அப் படிமத்தின் கீழ் அடியில் வரும் கல்வெட்டு உளது:-- (1) ஸ்வஸ்திஸ்ரீ கண்டராதித்ததேவர் தேவியார் மாதே வடிகளாரான ஸ்ரீ செம்பியன் மாதேவியார் (2) தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழர் திருராஜ்யஞ் செய்த (3) ருளா நிற்க தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்ததேவர் திருநாமத்தால் திருநல்ல முடையாருக் குத் (4) திருக்கற்றளி எழுந்தருளுவித்து இத்திருக்கற் றளியிலேய் திருநல்லமுடையாரைத் திருவடித் தொழு (5) கின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீ கண்டராதித்த தேவர் இவர்." [ S. I. I., Vol. III, No. 146] இத் திருக்கோயிலில் நாள் வழிபாடும் பிற விழாக்களும் நடை பெறுவதற்குச் செம்பியன் மாதேவி நிலங்கள் வழங்கிச் செய்துள்ள ஏற்பாடுகள் படித்தின் புறத்தக்கன. பெருவத்திருக்க