பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பிற்காலச் சோழர் சரித்திரம் நாடுகளையும் வென்று, தன் ஆட்சிக்குட்படுத்தி யிருந்த மூன்றாங் கிருஷ்ணதேவன், தன்பால் அடைக்கலம் புகுந்தி ருந்த வைதும்பராய மன்னனுக்கு அவற்றை யளித்துத் தன் பிரதிநிதியாகவிருந்து ஆண்டு வருமாறு ஏற்பாடு செய்திருந் தான். அவ்வேந்தனுக்குப் பிரதிநிதியாக அமர்ந்து மலாடு, வாணகோப்பாடி நாடு, சிங்கபுர நாடு என்பவற்றை முதலில் அரசாண்டவன் விக்கிரமாதித்த வைதும்ப மகாராசன் என்பது தென்னார்க்காடு ஜில்லாக் கீழூரிலுள்ள ஒரு கல்வெட்டினால் தெளிவாக அறியப்படுகிறது . அவனுக்குப் பின்னர் வைதும்ப மகாராசன் திருவையனும் பிறகு அவன் மகன் ஸ்ரீ கண்டனும் இராஷ்டிரகூட மன்னன் பிரதிநிதிகளாக இருந்து அப்பகுதிகளில் ஆட்சி புரிந்தனர் 2. அரிஞ்சயன் தான் வைதும்ப வேந்தரோடு போர் புரிந்து அந்நாடுகளைக் கைப்பற்றவேண்டி யிருந்தமையின், முதலில் தன் புதல்வி அரிஞ்சிகைப் பிராட்டியை ஒரு வாணர்குல மன்னனுக்கு மணஞ் செய்து கொடுத்து அக்குலத்தினர் உறவும் நட்பும் பெற்று அன்னோர்க்கு இராஷ்டிரகூடத் தொடர்பு அற்றுப் போகும்படி செய்துவிட்டான் 3. பின்னர், இவ்வேந்தன் சோழ இராச்சியத்தின் வடபகுதியாகத் தன் தந்தையின் காலத்தி லிருந்த திருமுனைப்பாடி நாட்டையும் தொண்டை நாட்டை யும் கைப்பற்றுவதற்குப் பெரும் படையுடன் புறப்பட்டான். அப்போது நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளை அறிவிக்கும் கல்வெட்டுக்கள் இதுகாறும் கிடைத்தில. ஆனால், வட ஆர்க் காடு ஜில்லாவிலுள்ள ஆற்றூரில் இவன் இறந்தனன் என்று தெரிகிறது. இவனை ' ஆற்றூர்த்துஞ்சின தேவர் ' 4 என்று சில கல்வெட்டுக்கள் கூறுவதால் இச் செய்தியை நன் கறியலாம். இவன் போரில் உயிர் துறந்தனனா அன்றி இயற்கையாகவே இறந்தனனா என்பது இப்போது புலப் 1. Ins. 16 of 1905. 2. Ep. Ind., Vol. VII, pp. 142-44; Ins. 743 of 1905. 3. Ins. 215 of 1911. 4. S. I, I., Vol. III, Nos. 15, 16 and 17.