வழியெல்லாம் ஒரே காடு. அந்தக் காட் டுப் பாதையில் பகலில் செல்லவே பயமாக இருக்கும். இரவு நேரத்தில் கேட்கவேண்டுமா? இரவிலே இரைதேடி அலையும் மிருகங்கள், மேலே வட்டமிட்டுத் திரியும் பறவைகள், அவைகள் போடுகின்ற பயங்கர சப்தங்கள் இவற்றை ெய ல் லா ம் அவர் சிறிதும் பொருட் படுத்தவில்லை. எப்படியும் இமய மலைச் சாரலை நாம் அடைந்துவிட வேண்டும். அங்குள்ள சங்கியாசிகளைக் காணவேண்டும். அவர்களில் ஒருவரை கம் குருவாகப் பெற. வேண்டும். அங்கேயே தங்கிவிட வேண் டும்" என்ற ஒரே கினைப்புடன் அவர் கடந்து கொண்டே இருந்தார். இமயமலையில் வசிக்கும் சங்கியாசி களைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிருர். அவர்கள் கடும் தவம் செய்து முக்தி அடை கிருர்கள் என்றும் அவருக்குச் சிலர் கூறி இருக்கிருர்கள். அவர்களைப் பற்றி சுபாஷ். அடிக்கடி கினைப்பார். தாமும் ஒரு சாமியா ராக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். ஆனல், அப்பா அம்மாவிடம் சாமியாராகப் போக வேண்டும் என்று சொன்னுல், அவர்கள் சரி என்பார்களா? அதனுல்தான் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டுக் கிளம்பிவிட் டார்! அறு சுவை உணவுடன் செல்லமாக வளர்ந்த அவர் காய் கணிகளைத் தின்ருர்; தண்ணிரைக் குடித்தார்; கால் கோவ அலைக் 109
பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/111
தோற்றம்