பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தான் இருக்கிறது” என்ருர்கள். சிறுவ னுக்கு யார் கூறுவது சரி என்று தெரிய 6.3608.50. ஒரு நாள் அவன் சாப்பிடுவதற்காக ஓர் ஆரஞ்சுப் பழத்தை எடுத்தான். அதைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் போது பின்புறத்திலிருந்து ஒரு வண்ணுத்திப் பூச்சி பழததின் மேல் ஏறி வருவதைப் பார்த்தான். முதலில், அதன் இறகின் மேல் பகுதி மட் டுமே தெரிந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்ச மாக இறகின் முழுப் பகுதியும் தெரிந்தது. வண்ணுத்திப் பூச்சி பழத்தின் மேல் ஏறி மேலே வந்ததும், அதன் முழு உருவமும் நன் ருகத் தெரிந்தது. உடனே அச்சிறுவன், சந்தேகமில்லை. பூமி உருண்டைதான். பூமி உருண்டையாக இருப்பதால்தான், கப்பல் வெகு துரத்தில் வரும்போது, முதலில் தலைப்பாகம் மட்டுமே தெரிகிறது. நெருங்கி வர வரத்தான் நடுப் பாகமும், அடிப்பாகமும் தெரிகின்றன” என்ற முடிவுக்கு வந்தான். இதைத் தன் தோழர்க ளிடத்திலே கூறினன், எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரித்தார்கள். சிலர் பைத்தியம்’ என்று பட்டம் சூட்டினர்கள். ஒருவன், அப் படியானுல் இந்தியாவிலும், சீனவிலும் இருப் பவர்கள் பூமியில் தலைகீழாகத் தொத்திக் கொண்டுதான் நடக்கிருர்கள் போல் இருக்கி றது!" என்று கேலி செய்தான். 17 #671-3