பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் 17 அதிலும் இந்த விரதம் பெண்கள் அனுஷ்டிக்க வேண்டிய முக்கிய விரதம் என்றும் சொல்லுகின்றன. காரணம் இந்த உலகத்தில் ஆண்களை விடப் பெண்களே காரணமே இல்லாமல் வீண் அபவாதத்திற்கு உள்ளாகின்றார்கள். ஆதலால் அவர்கள்மேல் ஏற்படும் வீண் அபவாதங்கள் நீங்கவும் அவர்கள் மிகவும் விரும்பும் பிள்ளைப்பேறு முதலிய எண்ணங்கள் சித்தி பெறவும், சித்தி விநாயகரை அவர் விரும்பிய சதுர்த்தி அன்று விரதம் அனுஷ்டித்து வணங்குதல் வேண்டும். வருஷம் முழுவதும், இருபத்துநான்கு சதுர்த்தியிலுல் விரதம் அனுஷ்டிப்பதோடு ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தியில் விரத பூர்த்தி செய்து விநாயகரைத் தொழுதால் பெறுதற்கரிய பேறுகளையெல்லாம் பெறலாம் என்பது மக்கள் நம்பிக்கை. பிள்ளையார் பட்டியில் சதுர்த்தி விரதம் எல்லோராலும், சிறப்பாகப் பெண்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வருஷம் முழுவதும் ஆம், இருபத்து நான்கு சதுர்த்தி திதியிலும் விரதம் அனுஷ்டித்தவர்கள் எல்லாம், வருவடிக்கடைசியில் ஆவணி மாதம் சுக்லபகூடி சதுர்த்தியன்று விரத பூர்த்தி செய்கிறார்கள். அன்று பிள்ளையார் பட்டி பிள்ளையார் சந்நிதியில், வருஷம் முழுவதும் விரதம் அனுஷ்டித்த பெண்கள் ஒன்று கூடுகிறார்கள். விரத பூர்த்தி செய்ய வந்திருக்கும் பெண்கள் எத்தனையோ அத்தனை வெள்ளிக் குடங்கள். நானூறு ஐந்நூறு பேர் வந்தாலும், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒன்று என்று வெள்ளிக் குடங்கள் வைத்து ஒவ்வொரு குடத்தினுள்ளும் ஒவ்வொரு வெள்ளிப் பிள்ளையாரையும் போட்டு குடத்தில் தண்ணிர் நிரப்பிப் பூசனை புரிகிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு குடம் எடுத்து அபிஷேகம் செய்து கொள்ளுகிறார்கள். நனைந்த உடலோடும், உடையோடும் பிள்ளையார் சந்நிதியிலே விழுந்து வணங்கி, எழுந்து நின்று தீப ஆராதனையைக் கண்டு களிக்கின்றார்கள். அன்று கோயிலில் கொடுக்கும் பிரசாதமாகிய மோதக நைவேத்தியத்தை மட்டுமே அருந்துகிறார்கள். இப்படி விரதம் அனுஷ்டித்து விரத பூர்த்தி செய்கின்ற பெண்கள் எல்லோரும் அவரவர்கள் பிரார்த்தனை செய்து கொண்ட எல்லா நலன்களையும் பெறுகிறார்கள். பெண்கள் மட்டும் என்ன? ஆண்களுமே இந்தச் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் என்பது திண்ணந்தான். ஆனால் அபிஷேகம் எல்லாம் பெண்களுக்குத்தான். ஆண்களுக்கு இல்லை. பெண்ணின் பிரார்த்தனை நிறைவேறுகின்றதென்றால் அந்தப் பிரார்த்தனையில் நாயகனது பிரார்த்தனையும் சேர்ந்து கொள்ளும்தானே! ஆதலால் தனியே ஆண்மகன் வேறு பிரார்த்தனை பண்ணிக் கொள்ள வேண்டுமா, அபிஷேகம் பண்ணிக் கொள்ள வேண்டுமா என்ன? சதுர்த்தி விரதம் மேற்கொள்ள விரும்பும் எல்லோரும் பிள்ளையார்பட்டிக்குப் போகலாம். இல்லை அதற்கெல்லாம் அவகாசம்