ரா. சீனிவாசன்
139
நாரதன் தமயந்தி சுயம்வரம் குறித்து இந்திரனிடம் செய்தி செப்புகின்றான். அவள் பேரழகி என்று கூறுகிறான். அதனை அவன் கூறுவது அழகிய சொல்லாட்சியைப் பெற்று உள்ளது.
அவள் அழகி; மெல்லியல் படைத்தவள்; அழகு சுமந்து அதனால் மெத்தவும் இளைத்துவிட்டாள் என்று கூறுவது நயம் மிக்கதாக உள்ளது. அதேபோல் ‘பழகு கருங் கூந்தற் பாவை’ என்று அவள் வடிவினைக் கூறுவது அழகு தமிழாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
“அவள் வீமன் குடிக்கு ஒர் நிலை பெற்ற விளக்கு; அவள் காமனுக்கு ஒரு பாதுகாப்பு” என்றும் கூறுகிறார்; பாவை போன்றவள், அவள் அழகினள், வீமன் மகள், கவர்ச்சி மிக்கவள் என்ற செய்திகள் இக்கவிதையில் தருகிறார்.
அழகு சுமந்திளைத்த ஆகத்தாள்; வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம்; மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு
இந்திரன் இட்ட ஏவல் ஒரு பக்கம்; தமயந்திபால் கொண்ட ஆவல் மற்றொரு புறம்; இரண்டுக்கும் இடையே அவன் அலைமோதும் உள்ள நிலை; நெசவுத் தொழிலாளி அவன் அசைத்து இயக்கும் பாவு (மூங்கில் குழல்) போன்றது என்று கூறுவது சிறப்பாக உள்ளது.” இரு புறமும் அது மாறி மாறிச் சென்று இடிக்கிறது; அதேபோல் அவன் உணர்வுகள் உதைக்கின்றன; அவனை வதைக்கின்றன” என்கிறார்.