பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

புகழேந்தி நளன் கதை



“யாம் பூஞ்சோலையில் வாழுகின்ற பறவைக் கூட்டம். அவள் தன் மனையிடத்தில் மயிற்கூட்டம் போல் திரிந்து உள்ளோம்; காமன் அங்கு வந்து படை கற்க வருவான். அவள் பாத நடையைக் கற்க யாம் செல்வது வழக்கம்” என்று கூறியது.

அன்னத்திற்கும் தமயந்திற்கும் உள்ள உறவு, பழக்கம், நெருக்கம் அறிந்ததும் அவனுக்குக் காதலில் வேட்கை மிகுந்தது.

“இற்றது நெஞ்சம்; எழுந்தது இருங்காதல்; அற்றது மானம்; அழிந்தது நாண்” என்று தன்நிலை பற்றிக் கூறினான். “இனி என் உயிரே உன் கையில்தான் உள்ளது. நீ கொண்டு வந்து கூறும் சொற்களில்தான் என் வாழ்வு உள்ளது” என்று கூறினான்.

“அவளை உன் தோள்களில் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்று கூறி விடை பெற்றது.

“வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றது; உயரப் பறந்தது.

அவன் ஆர்வம் அளவு கடந்தது. அது விரைவில் செல்ல வேண்டும், சென்று பேச வேண்டும். காதலை எடுத்து இயம்ப வேண்டும். மறுஉரை பெற்றுத் திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினான்.

அவள்பால் கொண்ட காதல் அவனைப் பெரிதும் கலக்கியது. அவள்பால் கொண்ட விருப்பு அதனால் காதல் காட்சி ஏதேனும் கண்டதும் அவன் மனம் அழிந்தான்; வேதனையால் வெந்து வருந்தினான்.

ஆண் குயில், பெண் குயிலுடன் விரும்பி மகிழ்வுடன் பேசும் சிறுகுரல் கேட்டான். அவ்வளவுதான் அதை