பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

புகழேந்தி நளன் கதை



பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்
கைக்குள் வருமாபோற் கழன்றோடி - எய்க்கும்
இளைக்குமா போல் இருந்ததுகண் டன்றே
வளைக்குமா றெண்ணி மன் 260


கொற்றக் கயற்கட் கொடியே இருவோரும்
ஒற்றைத் துகிலா லுடைபுனைந்து - மற்றிந்தப்
பொற்றுகிலாற் புள்வளைக்கப் போதுவோ மென்றுரைத்தான்
பற்றகலா வுள்ளம் பரிந்து 261


எற்றித் திரைபொர நொந்தேறி யிளமணலிற்
பற்றிப் பவளம் படர்நிழற்கீழ் - முத்தீன்று
வெள்வளைத்தா யோடு நீர் வேலைத் திருநாடன்
புள்வளைத்தான் ஆடையாற் போந்து 262


கூந்தல் இளங்குயிலும் கோமானும் கொண்டணைந்த
பூந்துகில் கொண் டந்தரத்தே போய்நின்று - வேந்தனே
நன்னாடு தோற்பித்தோன் நானேகாண் என்றதே
பொன்னாடு மானிறத்த புள் 263


காவிபோற் கண்ணிக்கும் கண்ணியந்தோட் காளைக்கும்
ஆவிபோ லாடையுமொன் றானதே - பூவிரியக்
கள்வேட்டு வண்டுழலுங் கானத் திடைக்கனகப்
புள்வேட்டை யாதரித்த போது 264


அறம்பிழைத்தார் பொய்த்தார் அருள்சிதைத்தார் மானத்
திறம்பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் - புறக்கடையில்
சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொல் என்றழியா
நின்றாள் விதியை நினைந்து 265


வையம் துயருழப்ப மாயம் பலசூழ்ந்து
தெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ - மெய்வகையே