பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

71



இந்தப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு எப்படிச் செல்வது? எங்கே செல்வது. அரும்புகள் அவை வாடக் கூடாது என்று சிந்தித்தான்.

விதியை எண்ணி நொந்தான். நினைவு அலைகள் அவனை வாட்டின. வாய் திறந்து பேச அவனுக்குக் கருத்துக்கள் துணை செய்யவில்லை. சித்திரம் போல் அசைவற்று நின்றான். வாழ்க்கையின் விசித்திரங்கள் அவனை வதை செய்தன.

கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தான். ‘விதி’ என்று முடிவு செய்தான். எதிர்காலம் அவன் முன் நின்று கேள்விகள் எழுப்பியது.

இந்தக் காட்டில் இவர்களை எங்கே இழுத்துச் செல்வது? தான் செய்த தவறுக்குத் தன் துணைவி ஏன் துயர் உற வேண்டும்.

அவர்களை அல்லல் நீங்க வாழச் செய்வது என்று முடிவு செய்தான். தாரம் அவள்; உண்மைதான்; என்றாலும் அவள் வீமன் மகள்; அரசமகள்; அவள் தன் சொந்த நகர்க்குச் செல்வதுதான் உகந்தது என்று நினைத்தான்.

மாலையிட்ட மங்கை அவளைப் பிரிய எண்ணினான். அவர்களை அவள் தந்தை நகருக்கு அனுப்புவது தக்கது என்று கருதினான்.

அன்பு மக்களை வலியச் சுரம் வழி அழைத்துச் செல்வது தரம் அன்று; அவர்களுக்கு அது தீமை பயக்கும். என்ன உண்டாகும் என்று கூறமுடியாது. காதம் நடக்க அவர்கள் கால்கள் இடம் தராது. ஏதம் உடைத்து இப் பெருவழி என்று கூறினான்.

“மக்களை அழைத்துக் கொண்டு நீ மாநகர் செல்க; விதர்ப்பன் நகர் அடைக; பாட்டன் வீட்டில் இவர்கள்