பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

89



மயில்போல் இருந்த அவள் ஓடினாள்; ஒடினாள்; வாழ்க்கையின் ஒரத்திற்கே ஒடினாள். உயிர் தப்ப வழிநாடினாள். தூறுகளில் சிக்கினாள். இனி ஒடுவதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. கண்ணீர் விட்டுக் கதறினாள். அழுகை அவனை அமைதிப்படுத்தவில்லை.

புலி தொடரச் செல்லும் சிறுமான் போல் ஓடியவள் வேங்கையாக மாறினாள். பாயும் புலியாக அவனைச் சினந்து நோக்கினாள். வீரம் அவள் விழிகள் பேசியது; கனல் தெறித்தது; அவனை எரித்தது. சிவன் எரித்த திரிபுரம் ஆயினான்; மன்மதன் சாம்பல் ஆயினான். வில்லும் அம்பும் தவிர வேறு நினைவுச் சின்னங்களை அவன் விட்டுச் செல்லவில்லை. மாயமாய் மறைந்து சாம்பல்தான் மிஞ்சியது.

உயிரைக் காத்தவன்தான்; என்ன செய்வது? அவள் மானத்தைத் தொட்டான். ‘தற்காப்பு’ அவளுக்கு உண்டு என்பது அறியாதவன், கற்புக்குப் காப்பு அவளிடம் இருந்தது; ‘காப்பீடு’ என்று பேசும் ஆதரவு நிலையில் அவள் இல்லை. கேட்பாரற்று இருக்கும் இடம் அது. கொள்ளை அடித்தவரை நன்மை, அவன்தான் தவமுனிவன் அல்ல என்பதைக் காட்டிக் கொண்டான்.

அவனிடமிருந்து தப்பி மீண்டு வெளியே வந்தாள். ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இடையே காடு ஒன்று இருந்தது. அதை விட்டு வெளியே வந்தால் எந்த நாட்டையாவது அவள் அடைய முடியும். குழப்பம் தேர்தல் முடிவு வரைதான்; பின்பு கரை சேர முடியும்; நிலையான ஆட்சியைக் காண முடியும்.

வழிப் போக்கர்கள் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்தாள். வணிகம் செய்யும் வாணிபன் ஒருவன் அங்கு வந்தான். இந்த வடிவழகியைச் சந்தித்தான்.