பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51முருகுசுந்தரம்

பாடுதல்-
கடவுளுக்கு எளிய செயல்
ஆனால் நமக்கு..?
மண்ணில் இருக்கும் நம்மை
அவன் எப்போது
விண்ணுக் குயர்த்துவான்?

இளைஞனே!
முதற் காதல்
பொங்கிக் கிளம்பும் போது
இதழ்க் கதவை உடைத்துக் கொண்டு
உணர்ச்சி
ஓசையுருவம் பெறுகிறதே!
அதுவன்று பாட்டு,

பாடுவதை
மறக்கக் கற்றுக் கொள்;
அது தேவையுமில்லை.
உண்மையான பாட்டுக்கு
ஒரு புது மாதிரியான
சுவாசம் தேவை.
ஓர் அமைதி!
ஒரு கடவுளின் சிலிர்ப்பு!
ஒரு மென் காற்று!

[ஆர்ஃபிசை நோக்கி]

1922 ஆம் ஆண்டில் மார்ஷல் ப்ரோஸ்ட் என்ற கவிஞன் இறந்தபோது அவனைப் பற்றி ரில்க் கீழ்க்கண்டவாறு தம் கடிதத்தில் குறிப்பிட்டெழுதியுள்ளார்:

“இவன் பயன்படுத்திய கவிதை உத்தி மிகச்செம்மையானது. இது எந்தக்குறிப்பிட்ட பொருளிலும் ஊன்றி நிற்பதில்லை. இது விளையாட்டாக வெளிப்படுத்தும் கருத்துக்கள் ஈடற்ற துல்லியத்தோடு, புதிய புதிர்களை மேன்மேலும் தோற்றுவித்த வண்ணம் அங்குமிங்கும்

ஒட்டிக்கொண்டு ஊசலாடும்.”

மார்ஷல் ப்ரோஸ்டைப்பற்றி ரில்க் கூறிய கருத்துக்கள் அவருக்கும் பொருந்தும். ரில்க்கின் கவிதை சுவைத்துப் படிப்பதற்கேற்றது. அதைப்பின்பற்றி யாரும் எழுதவும் முடியாது; அதை மொழிபெயர்க்கவும் முடியாது. துண்டு துண்டாகக் காணப்படும் அவருடைய கவிதையின் உறுப்புக்கள், புதிய இளமை குன்றாத பேச்சு விதையிலிருந்து பெறப்பட்டவை. மூலமானதும், உயிர்த்துடிப்பானதுமான இப்புதிர் மொழியைப் புரிந்து கொள்ளக் கவிதையின் இயற் பொருளை ஊக்கத்தோடும் ஈடுபாட்டோடும் படிப்பவர்கள் அணுக வேண்டும்.