புதுக்கவிதைபற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இரண்டு:
- (1) புதுக்கவிதை புரிவதில்லை.
- (2) புதுக்கவிதையில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
口
பண்டைக் காலத்தில் கவிஞனுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்; அவன் சகலகலா வல்லவன்.
இளங்கோ கவிஞர் மட்டுமல்லர்; இசை மேதை; நாடகாசிரியர்; வானநூல் வல்லுநர்; நவமணிகளின் குண வேறுபாடுகளை உணர்ந்தவர்.
மைக்கேல் ஏஞ்சலோ ஓவியர்; சிற்பி; கவிஞர்.
லியனார்டோ டாவின்சி ஓவியர்; சிற்பி ; கட்டிட மேதை; பொறிஞர்; இயற்பியல் அறிஞர்; கவிஞர்.
அறிவியல் மேதையான கலீலியோ கவிஞரும் கூட.
கெதே மாகவிஞர்; இசைமேதை; நாடகாசிரியர்; அரசியல் அறிஞர். தமது அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு பாரிசு நகரம் சென்று ஓவியம் பயின்றார்; தாவரவியல் (Botany) பற்றியும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.
ஷேக்ஸ்பியர் உலகம் அறிந்த தெல்லாம் அறிந்தவர். நம் நாட்டிலும் ‘கல்வியில் பெரியவன் கம்பன்’;
19-ஆம் நூற்றாண்டில் அறிவியல் பொருளியல், அரசியல், உளவியல், தத்துவவியல் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இந்நிலை மாறத் தொடங்கியது.