22
புகழ் மாலை
திருத்தத்தில் வெற்றிபெற்றான் ஒட்டக் கூத்தன்
தீர்ப்பளித்து வெற்றிபெற்றான் கரிகாற் சோழன்
நிருத்தத்தில் வெற்றிபெற்றான் ஆட்டனத்தி
நிதியளித்து வெற்றிபெற்றான் பாரி வள்ளல்
வருத்தத்தில் வெற்றிபெற்றார் வடலூர் வள்ளல்
வாளேந்தி வெற்றிபெற்றான் சேர லாதன்
விருத்தத்தில் வெற்றிபெற்றான் கம்பன்; அந்த
வெற்றியினை இவர்பெற்றார் என்னைப் போல.
படைநடத்தல் போல்நடக்கும் நடையும்; சங்கப்
பழந்தமிழ்நூல் அடையாள நடையும்; பாட்டின்
இடையிடையே இசையசைவு நடையும்; ஒடை
ஏந்திவரும் அலைநடையும் கூட்டிக் காட்டி
மடைதிறந்த வெள்ளம்போல் கவிதை தந்தார்
மலைபோன்று தலைநிமிர்ந்த உவமை தந்தார்.
தடைநடையே அவரெழுத்தில் இல்லை. வாழைத்
தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?
சூரியனைக் கிழக்கேபார்; பாவின் வேந்தர்
சுடர்விளக்கை நீ, 'குடும்ப விளக்'கி'லேபார்
ஓரிரவை அண்ணாவின் எழுத்தி லேபார்
உயர்கருத்தை எதிர்பாரா முத்தத்தில் பார்
நேரிழையார் நிலாமுகத்தில் சிரிப்பை நீபார்
நீயதனை அவரழகின் சிரிப்' பிலேபார்
பாரியவன் சுனையதனில் குளிரை நீபார்
பாரதிதா சன்நூலில் வீரத் தைப்பார்