罩2 புகழ் மாலை
சீலத்தால் மிகப்பெரியான், அருணை தன்னில் திகழ்ராம சுரத்குமார் தின்பால் சென்றே"
ஒலத்தை இடுமின்நீர்; அப்போ துங்கள்
உள்ளத்தே உண்மைநிலை தோன்றல் ஆமே. 4 I
அகரமுதல் எழுத்தாகி இசையு மாகி
ஐம்பூத மாய் ஐந்து புலனு மாகிச் சிகர மிகு மலேயாகிக் குளமாய் என்றும்
சீகரம்சேர் ஆழியாய் நிற்பான் தன்னைப் பகர்வதற்கோர் சொல்லில்லை; எனினும் அன்னேன்
பாதத்தை மனத்தகத்தே வைம் மின் என்றே பகருகின்றன் அருணையினில் இருக்கும் யோகி,
பலர் புகழும் ராமசுரத் குமாரன் தானே. 42
எள்ளுக்குள் எண்ணெயுள்ள படியே போல
எழில் மலர்க்குள் மணமிருந்த வகையே போலக் கள்ளுக்குள் சுவையிருந்த தன்மை போலக்
கனலுக்குள் வெம்மையுள்ள படியே போல, உள்ளுக்குள் உளத்துக்குள் ஒருவன் நின்ருன்,
உணரு மினே என்றுநித்தம் சாற்று கின்ருன், விள்ளுக்குள் அடங்காத பெரிய சீலன்
வியன்ராம சுரத்குமார் ஆகும் யோகி. • 堡品
நாட்டகத்தில் இருக்கின்ருர் பொருளைத் தேடி
நல்லநிலம் தனத்தேடி வாழ்வு பெற்ருேம் சட்டகத்தே மிகப்பணத்தைச் சேர்த்தோம் என்றே இறுமாந்தே இருப்பார்கள், மரணம் வந்தால் காட்டுகின்ற பொருளெல்லாம் துண்யாங் கொல்லோ?
கருத்தன்.அவன் திருவடியைக் காண லாமே, வேட்டுநிற்பின் பற்றின்றி எனச்சொல் கின்ருன்,
வியன்ர்ாம் சுரத்குமார் என்னும் யோகி. 44