பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2

முகத்தைப் புதைச்சு கண்ணை சிக்னு மூடிக்கோ; பயம் தெரியாது’ என்று உபதேசித்தார் பெரியவர். .

அவள் அவ்வாறே கிடந்தாள். ஆயினும் அவளுக்குத் தூக்கம் வர வெகு நேரம் பிடித்தது...

விடிந்ததும் தாத்தா எழுந்து அவர் வேலைகளைக் கவனிக்கப் போனார். - . . . .

வள்ளி எழுந்தபோது வெயில் வந்திருந்தது. குருவிகள் தத்தியும் பறந்தும் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு கோழி வீட்டுக்குள் வந்தது. அதை வெளியே துரத்திக்கொண்டு ஒடினாள். பூனை ஒன்று ஒரு சுவர் மீது சோம்பலாகப் படுத்திருந்தது. அதைப் பார்ப்பதற்கு இப்போது அவளுக்கு பயம் எதுவுமேயில்லை. ‘அடி, குத்து’ என்று கூட விரட்டினாள். . . . . .

தோட்டத்துப் பக்கம் போனாள். செம்பருத்திச் செடியில் பூக்கள் நிறைந்திருந்தன. அந்தச் செம்மை அவள் கவனத்தைக் கவர்ந்தது. சில பூக்களைப் பறிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. முயற்சி செய்தாள், எட்டவில்லை. பெரு விரல் களை ஊன்றி நின்று, எம்பிப் பார்த்தாள்; ஊகூங். அங்கே ஒரு கட்டை கிடந்தது அவள் பார்வையில் பட்டது. அதன் மீது ஏறி நின்று, முன்னே வளைந்து, கையை நீட்டி, செடியைப் பிடித்து இழுத்தாள்.

‘ஏட்டி ஏட்டி, அங்கே என்ன செய்யுதே9 கீழே விழுந்திரப்போறே என்று பதட்டத்துடன் எச்சரித்தவாறு தாத்தா அங்கே வந்து சேர்ந்தார். -

R &

- பூப் பறிக்கேன் - பெருமை குமிழியிட்டது அவள் பதிலில். .  :

‘இப்படி முன்னாலே வளைஞ்சா, கீழேதான் விழுவே. மூக்கிலே அடிபடும் ‘ என்றார் அவர். ‘கட்டை சரியாக இல்லை. இது மகுடிச்சு நீ கீழே விழுந்திருவே!"