பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் ар கவியரசர் முடியரசன் இருட்டுலகில் விடிவெள்ளி எழுதல் கண்டோம் இனியதொரு வைகறையும் வருதல் கண்டோம் சுருட்டுபவர் எவரென்று தெரிந்து கொண்டோம் தாங்கிவந்த விழியிமைகள் திறந்து கொண்டோம் உருத்துவரும் செங்கதிரோன் எழுந்து விட்டான் உலகமெலாம் தெளிவுபெற விளங்கிற் றிங்கே பொருட்டுறையில் பிற துறையில் சமமே கண்டு புனிதமுடன் அதைஎங்கள் உயிர்போற் காப்போம். - 14.3.1980 (ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு \ மலரில் வெளிவந்தது) _