பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்கின்ற மலர்களெலாம் பூக்கள் அல்ல புதியனவாய் வருவவெலாம் புதுமை அல்ல ஈர்க்கின்ற மணம் பரப்பும் மலர்க ளைத்தாம் எல்லாரும் போற்றிடுவர்; நலம்ப ரப்பிக் காக்கின்ற புதுமையைத்தான் ஏற்பர் சான்றோர்; காகிதப்பூப் போல்விரியும் புதுமை எல்லாம் போக்குதலே அறிவுடைமை; மயங்கி நின்று புதுமைஎனும் பெயராலே வீழ்தல் வேண்டா. செங்கதிரால் தாமரைகள் சிரித்தி ருக்கும் சேர்மதியால் அல்லிமலர் வாய்சி ரிக்கும் பொங்கிவரும் மழைவரவால் பயிர்சி ரிக்கும்; பொய்யாத மொழிக்குறளால் புலம் சி ரிக்கும்; துங்கமுறச் சிரித்திருக்கும் அறிவால் ஆய்ந்து "தாயனவன் சொல்வழியில் பொதுமை காண இங்கினிநாம் முயலுவமேல் புதுமை பூக்கும் புல்லடிமை தேய்ந்துசம நிலையே வாய்க்கும். - -: - r - * == c~Y. ല്പ് ت الصت اے ونی دیی پیر ریہیx^Gع ہ( ^