பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்கட்டும் புதுமை நெறிபிறழா உழைப்பதனைப் பெருக்கி நின்றால் நேரியநல் லுரிமைகளை வழங்கல் வேண்டும்; உரிமைகளைப் பறித்தடக்க எண்ணு வீரேல் உணர்ச்சிகளே பொங்கிஎழும் புரட்சி ஒங்கும்; சரியிழைகள் தெரியாத நிலைமை தோன்றும்; சமர்வருமுன் பெருகட்டும் உரிமை யாவும் சொரிமழைபோல் பொழியட்டும் உழைப்பை மாந்தர்; சுடர்விட்டு மிளிரட்டும் நமது நாடு. - -- சிரிக்கட்டும் மக்களெலாம் மகிழ்வு கொள்வோம்; சிரிப்பளவில் நில்லாமல் உழைப்பைக் கொஞ்சம் பெருக்கட்டும்; பெருகியதாற் பெற்ற இன்பம் பெருகட்டும் நிலைக்கட்டும்; சோம்ப லைத்தான் முறிக்கட்டும்; முறிக்கியபின் உழைப்பு நாட்டில் முளைக்கட்டும் முளைவிடுமேல் வாழ்வும் ஒங்கும்; இருக்கட்டும் நமக்கென்ன என்றி ருந்தால் - இனிக்கெட்டுப் போவதலால் வழியே இல்லை.