பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமை காண்போம் பதினான்கு சீர் விருத்தம் வறுமை மிக்கு வலிமை கெட்டு வறியர் வாடும் போதிலே வலியர் மட்டும் வளமை யுற்று வளர்வ தென்ன நீதியோ? பொறுமை யற்றுப் புலிடுகிர்த்துப் /# பொதுமை காணும் போரிலே - புரட்சி தோன்றும் புதிய போக்கில் புரளி என்ன நேருமோ? இருமை போக ஒருமை காண "இறைவன் சொற்ற பாட்டிலே இடரி லாத வழிகள் காண இறங்கி வாரும் நாட்டிலே வறுமை போக வளமை சேர வழிகள் யாவை? தேடுவோம் வளரும் நாடு பொதுமை யாகி வாழ்க என்று பாடுவோம்.

  • இறைவன்= வள்ளுவன்