பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே தமிழன்? தமிழனைக் காணவில்லை-ஈன்ற தாயகம் முழுவதும் போயெதிர் தேடினும் -தமிழனை இமிழ்கடல் வரைப்பில் எங்கணும் சென்றான் இசையுடன் தன் கொடி ஏற்றினன் என்றார் -தமிழனை இந்துவென் றொருவன் என்னெதிர் வந்தான் இசுலாம் எனவோர் இளைஞன் சொன்னான் வந்துமற் றொருவன் கிறித்தவன் என்றான் வருபவர் ஒவ்வொரு வகைவகை சொன்னார் -தமிழனை பார்ப்பான் முதலி பஞ்சமென் செட்டி ಆಕ್ಲೆ೧೦ பறையெனப் பலபேர் சுட்டி ஆர்த்தார் இனும்பல் லாயிரங் கொட்டி ஆதலின் என்மனம் அலைந்தது சுற்றி -தமிழனை 3.12.1982