பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிர்ப் பொங்கல் துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டு கண்டும் துணிந்தெதிர்த்தார் அஞ்சவிலை ஈழ நாட்டார் வளைக்கவரும் படைகண்டும் கலங்க வில்லை வரிப்புலியாய்ப் பாய்ந்தெதிர்த்து வாகை கொண்டார் அழைத்தபடை அரவணைக்கும் என்று நின்றார்; அமைதியெனும் பெயராலே குண்டு வீசித் தொலைக்கவரும் நிலைகண்டே மயங்கு கின்றார்; தோழமையே பகையானால் என்ன செய்வார்? சிங்களத்துக் கொடுங்கோலால் அடிமை யாகிச் சிக்குண்டு நலிந்துருகிப் பின்நி மிர்ந்து வெங்களத்தில் வரும் விடியல் எனநி னைந்து வேங்கையெனச் சினந்தெழுந்து போர்தொ டுத்தார் தர்குலத்தோர் விழியிழந்தும் உயிரிழந்தும் ச் தையலர்தம் கற்பிழந்தும் தயங்கா ராகித் தங்குறிக்கோள் வெற்றிபெறும் வேளை யிற்றான் தடையாகிப் பாரதமே நின்ற தம்மா!