பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிற் சாலைகளும் நன்செய் புன்செயும் காட்டின் நுரையீரல். தொழிலா ளர்களும் பாட்டா ளிகளும் துடிப்புடை நெஞ்சாவார்.

அவரவர் திறமைக் கேற்ப உழைப்போம் அனைவரும் பகிர்ந்துண்போம். அவரவர் தேவைக்கு ஊதியம் பெறுவோம் அனைவரும் நலம்பெறுவோம்.

உழையார்க் கிங்கே உணவிலை என்னும் உண்மை உணர்த்திடுவோம். உழைப்பா ளிகளெலாம் ஒன்றும் உலகை ஒருமனை யாக்கிடுவோம்.

18