பக்தி இயக்கமும் இலக்கியமும் 125
அன்னை என நினை.இ, நின்னடி தொழுதெனம் பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் - முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்; இன்னும் இன்னும் எம் காமம் இதுவே !
(பரிபாடல்: 13)
செருவேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,
பிரியாது இருக்க-என் சுற்றமோடு"உடனே!
(பரிபாடல்: 18)
மேலே காட்டியுள்ள மேற்கோள்கள் கேவலம் அந்த உலகத்தில் உள்ள பொருள்கள், அநுபவங்கள் நமக்கு வேண்டும் என்று பழந்தமிழர் கேட்கவில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
இவற்றுக்கு முடிமணியாகப் பரிபாடலின் 5 ஆம்
isri (al)
யாஅம் இரப்பவை பொருளும், பொன்னும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும், அறனும், மூன்றும் - உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!
(பரிபாடல்: 5)
பழந்தமிழர் கண்ட பக்தியில் இறைவனிடம் பொன், பொருள், முதலாயவற்றைக் கேட்கவில்லை என்பதும் தெளிவாகிறது.