பக்கம்:புதிய கோணம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியார் நட்பு 49

யானை பெருந்தீனி தின்னும் பிராணி. ஆனாலும் சிறிய மா அளவுள்ள நிலத்தில் விளையும் நெல்லை அறுத்து அரிசியாக்கித் தந்தால் பெரிய யானைக்குக் கூட அது பல நாட்கட்கு ஆகும். அவ்வாறு செய்யாமல் யானை தானே சென்று உண்ணட்டும் என்று அவிழ்த்து விட்டால் நூறு ஏக்கர் நிலமாயினும் வாயில் புகுவதைக் காட்டினும் காலில்பட்டு அழிவது மிகுதி. எனவே, அறிவுடைய வேந்தர் முறை தெரிந்து இறைப்பணத்தை வசூலித்தால் பலகாலம் அரசனும் மக்களும் இன்பமாக வாழ முடியும். அரசன் அறிவற்றவனாகித் தியவர்களை நட்புக்கொண்டு செலவை முன்னிட்டு வரியைப் பெற்றால் யானை புகுந்த வயலைப்போல நாட்டையுங் கெடுத்துத் தானும் கெடுவான் என்ற கருத்தில் பாடுகிறார்.

“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

மாநிறை(வு) இல்லதும் பல்நாட்(கு) ஆகும்; நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்(கு) உணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; : மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு பரிவுதய எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம்போலத் தானும் உண்ணுன் உலகமும் கெடுமே”

(புறம்: 184)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_கோணம்.pdf/57&oldid=660023" இலிருந்து மீள்விக்கப்பட்டது