16 புதிய தமிழகம்
என்று கூறியிருத்தலாலும், நம்மாழ்வார், 'பிறவி மாமாயக் கூத்தினேயே," என்று கூறியிருத்தலாலும், கி. பி. 9-ஆம் நூற்றண்டிலும் நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன என்பதை நன்கறியலாம்.
கி. பி. 10-ஆம் நூற்ருண்டில் தோன்றிய சிவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கிறது என்று கூறி யுள்ளது காணத்தகும்:
"இளைமையங் கழனிச் சாயல் ஏருழு
தெரிபொன் வேலி வளே முயங் குருவ மென்முேன்
வரம்புபோய் வனப்பு வித்திக் கிளேநாம் பிசையுங் கூத்தும் கேழ்த்
தெழுந் தீன்ற காம வினபயன் இனிதிற் றுய்த்து வீணே
வேந் துறையு மாதேர்." -2598
"நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைக் தோண்டியும்.........இவ்வாறு பிறரை ஐம்பொறியால் துகராமல் தடுத்து யாமும் துகர்ச்சியைக்கைவிட்டோம்.” எனவரும் வாக்கியம், சமணர் நாடகத்தை எந்த அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்டவல்லது.
'நாடக நயந்து காண்பார் நலங்கிளர்
கண்கள் சூன்றும்'
-முத்தியிலம்பகம், 2989
இவற்ருல் சிந்தாமணி எழுதப்பெற்ற கி. பி. 10-ஆம் நூற்றுண்டில் நாடகங்கள் தமிழ் நாட்டில் நடிக்கப் பெற்றன என்னும் உண்மையை உணரலாம்.