பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv நடத்த முனையும்போது, அவனுக்கும், அவன் காதலிக்கும் காண்ட்ராக்டர்களால் இழைக்கப் பட்ட கொடுமையைக் கண்டு ஈஸ்வர பூஜை செய்துகொண்டிருந்த சாமியாரே கொதித்தெழு கிறார். காவியுடையைக் களைந்துவிட்டு காக்கியுடை அணிந்து, புதிய திரிபுரங்களை அழித்து, ஆட் கொள்ளப் புறப்படுகிறார். இதில் இடம்பெறும் இன்னொரு நாவலான கேள்வித் தீ’ எனும் குறுநாவலும் ஒரு குருதிப் புனல்தான். கல்விக்கூடத்தை நிர்வகிப்பவன் ஒருவனின் கயமைத்தனத்தையும், பகலுணவுக்கு வரும் உணவுப் பொருள்களை விற்றுவிட்டு ஆட்டம் போடும் அயோக்கியத்தனத்தையும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரியையும், இவர் களின் கூட்டுச் சதியை தட்டிக் கேட் கும் ஆசிரியர் களை வேலைநீக்கம் செய்யும் அராஜகத்தையும், எதிர்த்துப் போராடும் ஆசிரியர்களின் போராட் டங்களையும் ஆசிரியர் சமுத்திரம் அவர்கள் வேக மாகவும் கோபமாகவும் எழுதிக் காட்டுகிறார். படிக்கும் வாசகர்களையும் கொதிக்க வைக் கிறார். புதிய திரிபுரங்களும் கேள்வித் தீவும்: வாசகர்களின் மனதில் ஒரு கோபத் தீயை மூடி.டி விடும் என்பது நிச்சயம், கங்கை புத்தக நிலையத்தார்