பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15-புதிய தெய்வம் . . . . . . . . . . . ஊருக்கே வாழ்ந்திருக்கும் உத்தமர்க்கோர் ஆலயம்!” கனிந்து குழைந்து கடவுள யாரென துணிந்த டையாளம் சுட்டிக் காட்டிற்று திரைப்படப் பாடல்! தெளிந்த தமிழில் கரையும் கற்கண்டாய் கடவுள் தத்துவம்! பந்தலின் முகப்பில் பாலத் தெதிரில் வந்தபிர முகர்களின் வாகன வரிசை இம்ப்பாலா, ஃபீயட் அம்பாஸிடர், ஷவர்லேட் வம்சங்களின் அழகிய அம்சங் களையே கண்டுகளித்துக் கொண்டிருந்த சிண்டு முண்டு சிறுவர் களிடையில் ஆடிட்டர் காரின் ஒட்டுநர் தினகர் பீடி குடித்துப் பேசிக்கொண் டிருந்தான்.